பதிவு செய்த நாள்
27 மே2011
14:01
புதுடில்லி : அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் காலாண்டில் நிகரலாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகரலாபம் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 760.44 கோடியாக பதிவாகி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், இது ரூ. 683.89 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிறுவன வருமானமும் 124 சதவீதம் அதிகரித்து ரூ. 843.38 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 1,892.47 கோடியாக அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரோசா தெர்மல் பவர் பிளாண்டில், தற்போது 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், 2012ம் ஆண்டிற்குள், மின் உற்பத்தியை 5 ஆயிரம் மெகாவாட்களாக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|