பதிவு செய்த நாள்
27 மே2011
15:58
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று, பங்குவர்த்தகம் உயர்வுடன் துவங்கி, ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குமுதலீட்டாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 221.46 புள்ளிகள் உயர்ந்து 18266.10 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 63.75 புள்ளிகள் அதிகரித்து 18266.10 என்ற அளவிலும் முடிவடைந்தது. ரியாலிட்டி, பேங்கிங், மெட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்ததன் காரணமாக, சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஐடிஎப்சி, ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஹிண்டால்கோ, ரிலையன்ஸ் இன்ப்ரா, ஆனந்த் ராஜ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டெர்லிங் இண்டர்நேசனல், பஜாஜ் இந்துஸ்தான், சின்டெக்ஸ் இந்தியா, ஐவிஆர்சிஎல், சிம்பொனி, அசென்சியா டெக்னோ, ரிலையன்ஸ் மீடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, அம்புஜா சிமெண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கெயில், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ், நெட்வொர்க் 18, டிடிகே பிரெஸ்டீஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|