ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாநிகர லாபம் ரூ.1,252 கோடி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாநிகர லாபம் ரூ.1,252 கோடி ...
டீசல், காஸ் விலை உயர்வு நிச்சயம் : மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2011
16:45

புதுடில்லி : பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதையடுத்து, டீசல் மற்றும் சமையல் காஸின் விலையையும் உயர்த்த மத்திய அரசு தி்ட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழு, அடுத்த மாதம் 9ம் தேதி கூடி விவாதிக்க உள்ளது. இந்த குழு, சிறிது நாட்களுக்கு முன்பு கூடுவ‌தாக இருந்தது. ஆனால், கடைசி ‌நேரத்தில் இது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழு கூட்டம், ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், எவ்வளவு உயர்த்தலாம் என்று விவாதிக்கப்பட்டு பின் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாதது என்று பிரணாப் முகர்ஜி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலியம் பொருட்கள் விலை அதிகரிக்கப்படாததால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் கடும் இழப்பு ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை நீட்டிக்க இயலாது என்பதால் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை சமீபத்தில் 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. அப்போது டீசல், சமையல் காஸ் விலை உயர்த்தப்படவில்லை. அவற்றின் விலையையும் உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 9-ந்தேதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் டீசல், சமையல் காஸ் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது முடிவு செய்யப்படும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 உயரும் என்று தெரிகிறது. சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.35 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலை உயர்த்தப்பட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எனவே டீசல் விலை உயர்வு சற்று குறையலாம் என்று கூறப்படுகிறது. அதுபோல காஸ் விலை உயர்வு நடுத்தர மக்களை பாதிக்கலாம் என்பதால், சிலிண்டருக்கு 35 ரூபாய் உயர்த்தப்படுவதற்கு பதில் 25 ரூபாய் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)