பதிவு செய்த நாள்
28 மே2011
10:05
புதுடில்லி : ரத்தினம் மற்றும் ஆபரண நகைகளின் ஏற்றுமதி, ஏப்ரல் மாதத்தில் 4.5 சதவீதம் அதிகரித்து 3.21 பி்ல்லியன்$ என்ற அளவில் உள்ளதாக ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோசன் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோசன் கவுன்சில் தலைவர் ராஜீவ் ஜெயின் கூறியதாவது, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளில் இந்திய நகைகளுக்கான மதிப்பு அதிகரித்திருப்பதாலும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2010-11ம் நிதியாண்டில், இதன் ஏற்றுமதி 3.07$ என்ற அளவில் இருந்ததாகவும், ஏப்ரல் மாதத்தில் 4.5 சதவீதம் அதிகரித்து 3.21$ என்ற விகிதத்தில் உள்ளது, இந்திய நகைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள நன்மதிப்பை காட்டுவதாகவும், இதன்காரணமாக, 2011-12ம் நிதியாண்டில், ஏற்றுமதி 10 முதல் 15 சதவீத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|