பதிவு செய்த நாள்
28 மே2011
10:30
மும்பை : புதிய சேவைகள் அறிமுகப்படுத்துவதற்காகவும், தங்களது நெட்வொர்க்கை தரம் உயர்த்தும் பொருட்டு, இந்த நிதியாண்டில் ரூ. 1,145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம்டிஎன்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவன தலைவரும் , நிர்வாக இயக்குனருமான குல்தீப் சிங் கூறியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரே பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான தாங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் புரோட்டகால் அடிப்படையிலான மல்டிமீடியா அகெளஸ்டிக் சேவையை இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளோம். டில்லி மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வரும் தங்கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ. 9 கோடி வருமானமாக ஈட்டியதாகவும், 2011-12ம் நிதியாண்டில், ரூ. 50 கோடி அளவிற்கு வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. 3ஜி சேவைக்காக, டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|