பதிவு செய்த நாள்
28 மே2011
15:05
மும்பை : வாரத்தின் எல்லா நாட்களிலும், 24 மணிநேரத்திலும் இயங்கக் கூடிய லாக்கர் வசதியை, இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐடிபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா கிளையில், இந்த எனி டைம் லாக்கரை திறந்து வைத்தபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஐடிபிஐ வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆர் எம் மல்லா கூறியதாவது, மக்களுக்கு ஏற்ற வகையில் எந்த நேரத்திலும் பயன்படுத்தக் கூடிய வகையில் லாக்கரை அமைத்துள்ளதன் மூலம், இந்த சேவையை வழங்கும் முதல் வங்கி என்ற பெருமையை தாங்கள் பெறுவதாகவும், இந்த எனி டைம் லாக்கரின் மூலம், பெண்கள் இந்த லாக்கரை டிரஸ்சிங் ரூமாகவும், ஆபரண நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை வைக்கும் அறையாகவும், நிறுவனங்கள், பாதுகாப்பாக வைக்க நினைக்கும் பொருளான சிடி உள்ளிட்டவற்றை இங்கு வைத்துக் கொள்ளலாம் என்றும், இங்கு வைக்கப்படும் பொருட்களை, எந்த நாட்களிலும் எந்த நேரத்திலும், தங்களின் பயன்பாட்டின்போது எடுத்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த எனி டைம் லாக்கரில், சிறந்த மற்றும் நல்ல சூழ்நிலை, சிறப்பு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய டிரஸ்சிங் ரூம், 24 மணிநேரமும் டீ மற்றும் காபி கிடைக்கக் கூடிய வசதி உள்ளிட்ட வசதிகளை இந்த லாக்கர் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|