பதிவு செய்த நாள்
28 மே2011
15:48
துபாய் : அமெரிக்காவின் முன்னணி மல்டிநேஷனல் ஆயில் மற்றும் கேஸ் வர்த்தக நிறுவனமான எக்ஸான்மொபில் நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், 16 பில்லியன் அமெரிக்க டாலரை கத்தாரில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த எக்ஸான்மொபில் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, அடுத்த 5 ஆண்டுகளில், சர்வதேச அளவில் 37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதில் பெரும்பகுதி கத்தாரில் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச அளவில் ஆற்றல் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. 2005ம் ஆண்டை ஒப்பிடுகையில், இதன் அளவு சிறிய அளவிலேயே இருந்ததாகவும், 2030ம் ஆண்டு வாக்கில் 35 சதவீதம் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். எஸ்ஸோ நிறுவனத்தின் தாய நிறுவனம் இந்த எக்ஸானமொபில் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|