பதிவு செய்த நாள்
29 மே2011
02:48
புதுடில்லி:இந்தியாவின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, சென்ற ஏப்ரல் மாதம், 938 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 14 சதவீதம் (828 கோடி ரூபாய்) அதிகம்.இதுகுறித்து, கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைவினைப் பொருள்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தேவை அதிகரித்துள்ளது.மேலும், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் நம் நாட்டின் கைவினைப் பொருள்களுக்கு நல்ல வர@வற்பு உள்ளது.இதனால், நடப்பு நிதியாண்டில் (2011 -12), கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி, 12 ஆயிரத்து 420 கோடி ரூபாய் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|