முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் பங்கு வர்த்தகம்முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் பங்கு வர்த்தகம் ... பருவ மழை நன்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால் நடப்பாண்டில் நெல் உற்பத்தி அதிகரிக்கும் பருவ மழை நன்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால் நடப்பாண்டில் நெல் உற்பத்தி ... ...
கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் விலை குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2011
02:49

புதுடில்லி:கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரின் விலை, நடப்பு கோடை மாதத்தில் 10 முதல் 12 சதவீதம் அதி கரித்ததால், தேக்கம் அடைந்துள்ளது. இதனால், கூடிய விரைவில் பால் பவுடரின் விலை குறைய வாய்ப் புள் ளது. நாட்டில், நடப்பு கோடை காலத்தில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் விலை 10 முதல் 12 சதவீதம் அதிகரித்தது. அதாவது, ஒரு கிலோ பால் பவுடர் விலை 180 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கு சென்றது. கடந் தாண்டு, டிசம்பர் மாதம், ஒரு கிலோ பால் பவுடர் விலை 165 ரூபாயாக இருந்தது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கூட்டுறவு நிலையங்கள் இது போன்ற பால் பவுடரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.இந்நிலையில், உள்நாட்டில், விலை அதிகரித்ததால், வாடிக்கையாளர்கள், வாங்குவதை குறைத்து கொண்டனர். இதனால், விரைவில், ஒரு கிலோ மீது 10 ரூபாய் வரை விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.உள்நாட்டில், பொதுவாக, கோடை காலத்தில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடருக்கு அதிகளவில் கிராக்கி இருக்கும். ஆனால், நடப்பாண்டில் தேவை குறைந்து காணப்பட்டது. பால் பவுடரை, அதிக நாள்கள், இருப்பு, வைக்க முடியாது என்பதால், விலை குறைத்து விற்க பால் பவுடர் விற்பனையாளர்கள் முடிவு செய்தி ருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில் இருந்து 500 கோடி ரூபாய் அளவிற்கு, பாலாடை கட்டி மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்நாட்டு தேவை மற்றும் விலையை கட்டுப்படுத்தும் வகையில், இவற்றின் ஏற்றுமதிக்கு சென்ற பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, வரி இல்லாமல், 30 ஆயிரம் டன் பால் பொருள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)