பதிவு செய்த நாள்
29 மே2011
02:49
புதுடில்லி:கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரின் விலை, நடப்பு கோடை மாதத்தில் 10 முதல் 12 சதவீதம் அதி கரித்ததால், தேக்கம் அடைந்துள்ளது. இதனால், கூடிய விரைவில் பால் பவுடரின் விலை குறைய வாய்ப் புள் ளது. நாட்டில், நடப்பு கோடை காலத்தில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் விலை 10 முதல் 12 சதவீதம் அதிகரித்தது. அதாவது, ஒரு கிலோ பால் பவுடர் விலை 180 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கு சென்றது. கடந் தாண்டு, டிசம்பர் மாதம், ஒரு கிலோ பால் பவுடர் விலை 165 ரூபாயாக இருந்தது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கூட்டுறவு நிலையங்கள் இது போன்ற பால் பவுடரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.இந்நிலையில், உள்நாட்டில், விலை அதிகரித்ததால், வாடிக்கையாளர்கள், வாங்குவதை குறைத்து கொண்டனர். இதனால், விரைவில், ஒரு கிலோ மீது 10 ரூபாய் வரை விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.உள்நாட்டில், பொதுவாக, கோடை காலத்தில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடருக்கு அதிகளவில் கிராக்கி இருக்கும். ஆனால், நடப்பாண்டில் தேவை குறைந்து காணப்பட்டது. பால் பவுடரை, அதிக நாள்கள், இருப்பு, வைக்க முடியாது என்பதால், விலை குறைத்து விற்க பால் பவுடர் விற்பனையாளர்கள் முடிவு செய்தி ருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில் இருந்து 500 கோடி ரூபாய் அளவிற்கு, பாலாடை கட்டி மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்நாட்டு தேவை மற்றும் விலையை கட்டுப்படுத்தும் வகையில், இவற்றின் ஏற்றுமதிக்கு சென்ற பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, வரி இல்லாமல், 30 ஆயிரம் டன் பால் பொருள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|