பதிவு செய்த நாள்
29 மே2011
09:33
புதுடில்லி : பெரு நகரங்கள் அல்லாத நகரங்களுக்கும் விமான சேவையை துவக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனது விமான சேவையை விரிவுபடுத்தவும் அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேலும் முக்கியமான சமயங்கள் அல்லாத நேரங்களிலும் அதிக விமானங்களை இயக்கவும் ஏர் இந்தியா தீர்மானித்துள்ளது. தற்போது 42 நகரங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெருநகரங்களில் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றன. பீகாரின் பகல்பூர், ஜார்கண்ட்டின் டியோகார்க், உத்திரபிதேசத்தின் ஆக்ரா மற்றும் கோர்காபூர் உள்ளிட்ட சிறு நகரங்களில் இருந்து வந்த கோரிக்கையின்படி இந்நகரங்களில் விமான சேவையை அறிமுகம் செய்ய தீர்மானித்திருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. முதல்கட்டமாக வட இந்திய நகரங்களிலும், அதனைத் தொடர்ந்து தென்னிந்திய நகரங்கள் வரையிலும் தனது சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|