பதிவு செய்த நாள்
29 மே2011
16:54
விஜயவாடா : ஆந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக இந்தியன் வங்கியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இன்று பேரணி நடத்தி உள்ளனர். இந்த பேரணி நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்றுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக மே 02ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஊர்வலம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் ஒய்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். ஊர்வலம் நடைபெறும் இந்த 100 நாட்களும் ஒவ்வொரு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து இந்தியன் வங்கியின் சேவைகள், புதிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிளக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 62 கிளைகளில் புதிதாக 28 ஆயிரம் வாடிக்கையாளர்களை சேர்க்கவும், அதன் மூலம் வங்கி சேமிப்பு அளவை ரூ.50 கோடி வரை உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|