பதிவு செய்த நாள்
30 மே2011
12:11
மும்பை : ரிலையன்ஸ் பிராட்கேஸ்ட் நெட்வொர்க் லிமிடெட்டின் (ஆர்பிஎன்எல்) ஒரு அங்கமான ரிலையன்ஸ் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, ஐரோப்பிய நிறுவனமான ஆர்டிஎல் குழுமத்துடன் கைகோர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரிலையன்ஸ் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐரோப்பிய நிறுவனமான ஆர்டிஎல் உடன், இணைந்து செயல்பட சமமான அளவில் பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில், விரைவில் ஆக்ஷன் மற்றும் ரியாலிட்டி பிரவிலான 2 ஆங்கில சேனல்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் இந்த சேனல்கள் துவக்கப்பட உள்ளது. தங்கள் நிறுவனம், 10 நாடுகளில், 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்பி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|