பதிவு செய்த நாள்
30 மே2011
16:44
ஐதராபாத் : பாக்டீரியல் லீஃப் பிளைட் நோய் எதிர்ப்பு சக்தி பெற்ற ஹைபிரிட் அரிசி அரைய்ஜ் 6444 கோல்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பேயர் பயோசயின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பேயர் கிராப்சயின்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான பேயர் பயோசயின்ஸ் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில், பாக்டீரியல் லீஃப் பிளைட் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆண்டிற்கு 20 முதல் 60 சதவீதம் வரை மகசூல் பாதிக்கப்படுகிறது. 6 முதல் 7 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டு, 6 மில்லியன் டன்கள் வரை இழப்பு ஏற்படுகிறது. தாவரத்தின் வளர்பகுதிகள் மற்றும் இலைகளில் சேதத்தை விளைவிக்கும் இந்த நோயினால் விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது, இந்த ஹைபிரிட் அரிசி அறிமுகப்படுத்தி இருப்பது விவசாயிகளுக்கு இனிய மற்றும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|