பதிவு செய்த நாள்
03 ஜூன்2011
13:01
புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், மே மாதத்தில், விற்பனை 1.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாருதி சுசூகி இந்தியா (எம்எஸ்ஐ) நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் மே மாதத்தில், தங்கள் நிறுவனம் 1,04,073 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில், 1,02,175 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. இது சதவீதத்தின் அடிப்படையில் 1.9 சதவீதம் அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தை விற்பனையை கணக்கிடும்போது 3.9 சதவீதம் அதிகரித்து 90,041 என்ற அளவிலிருந்து 93,519 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. உள்ளூர் மற்றும் ஒட்டுமொத்த விற்பனை அதிகரித்துள்ள போதிலும், ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்தில், 12,134 என்ற அளவில் இருந்த ஏற்றுமதி, இந்த ஆண்டின் மே மாதத்தில், 10,554 என்ற அளவாக குறைந்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில், 13 சதவீதம் குறைவு என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|