பதிவு செய்த நாள்
03 ஜூன்2011
15:09
புதுடில்லி : ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகரலாபம் 30.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகரலாபம் 30.5 சதவீதம் அதிகரித்து ரூ. 562.61 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் இது, ரூ.430.99 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2010-11ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், நிறுவன வருமானம் ரூ. 1,832.14 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 2,018.93 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|