பதிவு செய்த நாள்
03 ஜூன்2011
15:54
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 117.70 புள்ளிகள் குறைந்து 18376.48 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 33.60 புள்ளிகள் சரிந்து 5516.75 என்ற அளவிலும் முடிவடைந்தது. டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி, ஹிண்டால்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா, ஐடிஎப்சி, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் குறைந்திருந்த போதிலும், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இன்ப்ரா, டிஎல்எப், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் கேப்பிடல், பவர் கிரிட் கார்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|