பதிவு செய்த நாள்
04 ஜூன்2011
15:13
இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருப்பது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 1997ம் ஆண்டு பாக்ஸர் பைக்கை அறிமுகப்படுத்தியது. தற்போது அதன் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின், பல்ஸர் மற்றும் டிஸ்கவர் பைக்குகள், நாட்டின் நகரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், கிராமப்பகுதிகள் மற்றும் இரண்டாம் தர நகரப் பகுதிகளுக்கு ஏற்ற பைக்கை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆய்வு செய்து வந்தது. கிராமப்பகுதிகளில், இருசக்கர வாகனம் என்பது, ஆட்கள் பயணத்துக்கு மட்டுமல்ல, பொருட்களை எடுத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இரட்டை பயன் இருந்ததால் தான் கடந்த காலங்களில் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் ராஜ்தூத் மற்றும் எஸ்டி பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சூழ்நிலையில், பாக்ஸர் பைக்கை, 150 சிசி திறனுக்கு தரம் உயர்த்தி புதுப்பொலிவுடன் வெளியிட பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாக்ஸர் பைக், 111.6 சிசி திறனுடன் வெளி வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், புது பைக், மைலேஜ் குறைவாக தரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதை ஈடுகட்ட புது பைக்கின் விலையை ரூ.40 ஆயிரம் என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யவும் பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை குறைந்த 150 சிசி பைக், இந்திய கிராமப்பகுதிகளில் பெரும் வரவேற்பு பெறும் என்பது இந்த நிறுவனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த புது பைக், அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|