பீட் டீஸல் கார் அடுத்த மாதம் ரிலீஸ்பீட் டீஸல் கார் அடுத்த மாதம் ரிலீஸ் ... அசோக் லேலண்ட் விற்பனை சரிவு அசோக் லேலண்ட் விற்பனை சரிவு ...
'பாரத் பைக்'காக வலம் வரப் போகும் பாக்ஸர் 150
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2011
15:13

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருப்பது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 1997ம் ஆண்டு பாக்ஸர் பைக்கை அறிமுகப்படுத்தியது. தற்போது அதன் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின், பல்ஸர் மற்றும் டிஸ்கவர் பைக்குகள், நாட்டின் நகரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், கிராமப்பகுதிகள் மற்றும் இரண்டாம் தர நகரப் பகுதிகளுக்கு ஏற்ற பைக்கை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆய்வு செய்து வந்தது. கிராமப்பகுதிகளில், இருசக்கர வாகனம் என்பது, ஆட்கள் பயணத்துக்கு மட்டுமல்ல, பொருட்களை எடுத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இரட்டை பயன் இருந்ததால் தான் கடந்த காலங்களில் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் ராஜ்தூத் மற்றும் எஸ்டி பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சூழ்நிலையில், பாக்ஸர் பைக்கை, 150 சிசி திறனுக்கு தரம் உயர்த்தி புதுப்பொலிவுடன் வெளியிட பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பாக்ஸர் பைக், 111.6 சிசி திறனுடன் வெளி வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், புது பைக், மைலேஜ் குறைவாக தரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதை ஈடுகட்ட புது பைக்கின் விலையை ரூ.40 ஆயிரம் என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யவும் பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை குறைந்த 150 சிசி பைக், இந்திய கிராமப்பகுதிகளில் பெரும் வரவேற்பு பெறும் என்பது இந்த நிறுவனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த புது பைக், அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)