பதிவு செய்த நாள்
04 ஜூன்2011
16:43
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான கார்ப்பரேசன் வங்கி, நாட்டில் வங்கிச்சேவையை (குறிப்பாக, வடமாநிலங்களில்) விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மும்பையில் கார்ப்பரேசன் பேங்க் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமயுரையாற்றிய கார்ப்பரேசன் வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராம்நாத் பிரதீப் கூறியதாவது, 2011-12ம் நிதியாண்டில், புதிதாக 200 வங்கி கிளைகளை திறக்க தி்ட்டமிட்டுள்ளோம். இதற்காக, புதிதாக 1,200 பேரை பணியமர்த்த உள்ளது. வங்கி சேவை நாடுமுழுவதும் விரிவுபடுத்த உள்ளதாகவும், குறிப்பாக நாட்டின் வடமாநிலங்களில் சேவையை பெருமளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.வெளிநாடுகளில் சேவை விரிவாக்கள் குறித்த இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றும், ஆப்ரிக்க கண்டத்தில் மட்டும் 4 முதல் 5 கிளைகளை திறக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|