பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சிபஜாஜ் ஆட்டோ நிறுவனம் வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி ... ரூ.50,000 மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்தினால் 'பான் கார்டு' அவசியம் ரூ.50,000 மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்தினால் 'பான் கார்டு' அவசியம் ...
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,728 கோடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
04:23

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மே 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 168 கோடி டாலர் (7,728 கோடி ரூபாய்) உயர்ந்து, 31 ஆயிரத்து 21 கோடி டாலராக (14 லட்சத்து 27 ஆயிரத்து 12 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற மே மாதம் 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 104 கோடி டாலர் (4,784 கோடி ரூபாய்) உயர்ந்து, 30 ஆயிரத்து 853 கோடி டாலராக (14லட்சத்து 19 ஆயிரத்து 256 கோடி ரூபாய்) இருந்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 167 கோடி டாலர் (7,682 கோடி ரூபாய்) அதிகரித்து, 27 ஆயிரத்து 887 கோடி டாலராக (12 லட்சத்து 82 ஆயிரத்து 802 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. மேலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 40 லட்சம் டாலர் (1,840 கோடி ரூபாய்) அதிகரித்து, 459 கோடி டாலராக (13 ஆயிரத்து 620 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங் மற்றும் யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதை தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)