பதிவு செய்த நாள்
06 ஜூன்2011
16:45
மும்பை : இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், மறுகட்டமைப்பிற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்ணனி பொதுத்துறை வங்கிகளின் உதவியை நாட உள்ளதாக, ஏர் இந்தியா நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏர் இந்தியா நிறுவனம், தற்போது சீரான சீரான முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. 2010-11ம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. சம்பாத்தியத்திற்கு முந்தைய வட்டி, வரி, டெப்ரிசியேஷன் மற்றும் அமார்டிசேசன் உள்ளிட்டவைகளின் வளர்ச்சி, 2012ம் ஆண்டில் திருப்திகரமாக இருக்கும். இதன்மூலம், 2014ம் ஆண்டில் வரவு திருப்திகரமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 71 சதவீதமும், உள்நாட்டு அளவில் 75 சதவீத அளவிற்கும் லோட் பேக்டரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|