சென்ற 2010-11ம் நிதியாண்டில்தேங்காய் ஏற்றுமதி ரூ.537 கோடியாக உயர்வுசென்ற 2010-11ம் நிதியாண்டில்தேங்காய் ஏற்றுமதி ரூ.537 கோடியாக உயர்வு ... சென்ற 2010-11ம் நிதியாண்டில்மின் துறையில், அன்னிய முதலீடு ரூ.5,759 கோடி சென்ற 2010-11ம் நிதியாண்டில்மின் துறையில், அன்னிய முதலீடு ரூ.5,759 கோடி ...
நிறுவனங்களின் மூலப்பொருள் செலவின வளர்ச்சி விகிதம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2011
00:36

மும்பை:நடப்பாண்டில்,சென்ற மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில், நிறுவனங்களின் மூலப்பொருள் செலவின வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம், மூலப்பொருள்களுக்கான செலவினம் அதிகரித்துள்ளது.சென்ற மார்ச் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,815 நிறுவனங்களின், மூலப்பொருள் செலவினம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்,இந்நிறுவனங்களின் மூலப்பொருள் செலவினம், 27.2 சதவீதம் அதிகரித்து 4 லட்சத்து 19ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம்,கடந்த ஆண்டு இதே காலத்தில், இந்நிறுவனங்களின் மூலப்பொருள் செலவினம் முந்தைய ஆண்டை விட 38.2 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 30 ஆயிரம் கோடிரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், மூலப்பொருள் செலவினம் உயர்ந்துள்ள போதிலும், அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களின் ஒட்டு மொத்த செலவினம், நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 23.6 சதவீதம் உயர்ந்து 7 லட்சத்து 5ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில், 31.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு 5 லட்சத்து 70ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனங்களின் நிகர லாபம்8.1 சதவீதம் உயர்ந்து, 60ஆயிரத்து 317 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு 19.6 சதவீதமாக (55ஆயிரத்து 791 கோடிரூபாய்) இருந்தது. தொழிற்சாலைகளுக்கு தேவையான கனிமங்கள், ரப்பர், நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுள்,774 நிறுவனங்களின் மொத்த செலவில், மூலப் பொருள்களுக்கான செலவு, முந்தைய ஆண்டு இதே காலத்தை விட குறைந்துள்ளது. அதேசமயம் 1,041 நிறுவனங்களின் மொத்த செலவினத்தில், மூலப்பொருள் செலவினம் உயர்ந்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மொத்த செலவினத்தில், மூலப்பொருள்களுக்கான செலவினம், சராசரியாக 59 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்களின் மொத்த செலவினத்தில், மூலப்பொருள் செலவினம் 59.49 சதவீதமாக உள்ளது. இது சென்ற ஆண்டு, இதே காலத்தில்,57.87 சதவீதமாக இருந்தது.சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலப் பொருள்களுக்கான செலவு, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 99.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில் 18.9 சதவீதமாக இருந்தது. எம்.ஆர்.பி.எல் நிறுவனத்தின் மூலப்பொருள் செலவு, 56.1 சதவீதத்தில் இருந்து 41.4 சதவீதமாக குறைந்துள்ளது.இதே போன்று, மேலும் பல நிறுவனங்களின் மூலப் பொருள்களுக்கான செலவினம் குறைந்துள்ளது. இவ்வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 35.2 சதவீதம்(145.9 சதவீதம்), எஸ்ஸார் ஆயில் 32.7 சதவீதம்(86.2 சதவீதம்), எச்.பி.சி.எல் 30.6 சதவீதம்(50.6 சதவீதம்), ஐ.ஓ.சி.எல் 24.5 சதவீதம்(20.5 சதவீதம்), மாருதி ”‹கி 24 சதவீதம் (29.3 சதவீதம்), டாட்டா மோட்டார் 19.9 சதவீதம்(75.7 சதவீதம்), பீ.பி.சி.எல் 13.3 சதவீதம் (83.1 சதவீதம்) மற்றும் பெல் 3 சதவீதம் (16.3 சதவீதம்) என்ற அளவில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)