பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:39
புதுடில்லி:ரசாயன உரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இப்கோ நிறுவனம், ஈடுபட்டு வருகிறது.இந்நிறு வனம் 1,500 கோடி ரூபாய் கடன் திரட்டிக் கொள்வதற்காக இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.எப்.சி) மற்றும் யூரோப்பியன் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்(இ.ஐ.பீ) ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இப்கோ நிறுவனம், ஜோர்டான் பாஸ்பேட் மைன்ஸ் கம்பெனியுடன் (ஜே.பி.எம்.சி)இணைந்து, அந்நாட்டில், பாஸ்போரிக் அமிலம் தயாரிப்பதற்காக கூட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியது. இதனையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு,ஜோர்டான் இந்தியா பெர்டிலைசர் கம்பெனி(ஜே.ஐ.எப்.சி.ஓ)என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. 2,875 கோடி ரூபாய் திட்ட செலவிலான இந்த கூட்டு திட்டத்தில், இப்கோ நிறுவனம், 52 சதவீத பங்கு மூலதனத்தையும்,ஜே.பி.எம்.சி நிறுவனம் 48 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண் டுள்ளன.ஆண்டுக்கு 4.75 லட்சம் டன் பாஸ்போரிக் அமிலம் தயாரிக்கும் திறன் கொண்ட இத்தொழிற்சாலையில், தயாரிக்கப்படும் பாஸ்போரிக் அமிலத்தில், 70 சதவீதத்தை, இப்கோ நிறுவனம், அதன் சுய உர தேவைக்கு வாங்கிக் கொள்ளும். மீதமுள்ள 30 சதவீத அமிலத்தை ஜே.பி.எம்.சி. நிறுவனம் வாங்கிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த கூட்டு நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை, வரும் 2013ம் ஆண்டு, மத்தியிலிருந்து உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தேவையான, பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, ஜே.ஐ. எப்.சி.ஓ நிறுவனம், ஐ.எப்.சி மற்றும் இ.ஐ.பீ. நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும், 1,500 கோடி ரூபாய் கடனை திரட்டி தரும் தலைமை நிதி நிறுவனங்களாக செயல்படும்.இந்த கூட்டு நிறுவனத்தின் வாயிலாக, இந்திய விவசாயிகளுக்கு, தட்டுப்பாடு இல்லாமல், பாஸ்பேட் உர வகைகள் கிடைக்கும் என இப்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யு.எஸ். அவஸ்தி தெரிவித்தார். இப்கோ நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு 42.40 லட்சம் டன் யூரியா உரம் தயாரிக்கும் திறனில், இந்தியாவில் 5 தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனம் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் காப்பீடு, மின்சாரம், மொபைல் போன் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளையும் வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|