பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:45
மும்பை:நாட்டின், பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும், பங்கு வர்த்தகம் மிகவும் சுணக்கமாகவே இருந்தது. இதனால், மதியம் வரை பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.இந்நிலையில்,கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில், வங்கி துறையில், குறிப்பாக எச்.டீ.எப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஆகிய வங்கிகளின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இதனால், 'சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும் போது அதிகரித்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 43.63 புள்ளிகள் உயர்ந்து, 18,420.11 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,458.63 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,258.42 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 15.30 புள்ளிகள் அதிகரித்து, 5,532.05 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,542.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,479.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|