பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
09:31
புதுடில்லி : நாட்டின் முன்னணி தகவல்தொழில்நுட்ப பயிற்சியளிக்கும் நிறுவனமான என்ஐஐடி நிறுவனம், திறமை மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனமாக உருமாற இருப்பதாகவும், அதற்காக, முன்னணி ஆங்கில மொழி மற்றும் திறன் பயிற்சி நிறுவனமான ஈவால்வ் நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த என்ஐஐடி செய்தித் தொடர்பாளர் பிரதீக் சட்டர்ஜி கூறியதாவது, ஈவால்வ் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தங்கள் நிறுவனம் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 40 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, ஈவால்வ் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த உள்ளதாக அவர் கூறினார். அவற்றின் மதிப்பு குறித்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். தங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|