பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
16:40
மும்பை : இந்தியாவின் முன்னணி நகை வர்த்தக நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் கடைகளில், இத்தாலியின் முன்னணி பேனா வர்த்தக நிறுவனமான எமாண்டே நிறுவனத்தின் 'விஸ்கோந்தி' பேனா விற்பனை செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, கீதாஞ்சலி குழும உயர் அதிகாரி மேகுல் சோக்ஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் உள்ள தங்களது பிரதயேக அவுட்லெட்களில் இனி, விஸ்கோந்தி பேனா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இத்தாலிய நிறுவனமான எமாண்டே உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். நகை உலகில் முன்னணியில் உள்ள தாங்கள், இத்தாலிய நிறுவனத்துடன இணைந்து செயல்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் நிறுவனம், ஏற்கனவே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவுட்லெட்களில், இத்தாலிய பிராண்ட் நகைகள் மற்றும் வாட்ச்களை வர்த்தகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாத இறுதிக்குள், முதற்கட்டமாக 108 அவுட்லெட்களில் விஸ்கோந்தி பேனா விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து அவுட்லெட்களில் விற்பனையை விரிவுபடுத்த தி்ட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|