பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
01:43
சென்னை:சீனாவைச் சேர்ந்த பார்மீ கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜி நிறுவனம், இரண்டு சிம் வசதி மற்றும் நவீன சிறப்பு அம்சங்கள் கொண்ட, ஐந்து வகையான புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் ஜியாங் டெலாங் கூறியதாவது:தகவல்களை பறிமாறிக் கொள்ள, மொபைல் போன் சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த விலையில், அனைத்து சிறப்பம் சங்களையும் கொண்ட போன்களையே வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இத்தகையவர்களின் எதிர்பார்ப்புகளை, எங்களின் தயாரிப்புகள் நிச்சயம் நிறைவேற்றும்.சீனாவில், சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனம், ஆண்டுக்கு 22 கோடி அமெரிக்க டாலர் விற்று முதல் ஈட்டும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனம், ஆண்டுக்கு 1.15 கோடி மொபைல் போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ஜி ஸ்மார்ட் போன் மற்றும் புரொஜக்டர் வகை போன்களை குறைந்த விலையில் தயாரித்து அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அறிமுகம் செய்யப்பட்டுள்ள மொபைல் போன்கள், அனை வரும் வாங்கக் கூடிய வகையில், 1,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையிலான விலையில் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு டெலாங் கூறினார்.இப்புதிய வகை மொபைல் போன்களை, இந்திய இளம் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிமுகப்படுத்தினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|