பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
16:36
கோல்கட்டா : நாட்டின் முதல் மாதிரி பிளாஸ்டிக் மறுசுழற்சி பிளாண்ட், மேற்குவங்கத்தில் அமைக்கப்பட இருப்பதாக பிளாஸ்டிஇந்தியா பவுண்டேசன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பிளாஸ்டி இந்தியா பவுண்டேசன் தலைவர் அசோக் கோயல் கூறியதாவது, இந்த பிளாண்ட் அமைப்பதற்கான இடத்தை மேற்குவங் இண்டஸ்டிரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன் ஒதுக்கியுள்ளது. சங்க்ரயில் பகுதியில், 1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த பிளாண்டின் மூலம், உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து அதனை மீண்டும் பயன்படுத்தக்க வகையில் உருவாக்க உள்ளோம். இதற்கான புளூ பிரிண்ட 2 மாதங்களில் தயாரிக்கப்படும் என்றும், அரசின் ஒப்புதல் கிடைத்தவுன், உடனடியாக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 18 மாதங்களில் இந்த பிளாண்டில் செயல்பாடுகள் துவங்கும் என அவர் தெரிவித்தார். இந்த பிளாண்ட், ரூ. 1 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|