பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
23:55
புதுடில்லி: நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கூடுதலாக 10 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடப்பு 2010-11ம் ஆண்டில் 55 லட்சம் பருத்தி பொதிகள் (ஒரு பொதி 170 கி@லா) ஏற்றுமதி செய்ய ஏற்கன@வ மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவைக் குழு கூட்டம், புதன்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதலாக 10 லட்சம் பருத்தி öõதிகள் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.நடப்பு ஆண்டிற்கு, ஏற்கவே, ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட 55 லட்சம் பருத்தி பொதிகளில், இதுவரை 52.50 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|