பதிவு செய்த நாள்
09 ஜூன்2011
13:02
ஸ்ரீநகர் : இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், நாட்டின் கிரீடமான ஜம்மு காஷ்மீரில் 3ஜி சேவையை துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பார்தி ஏர்டெல் நிறுவன (வடமாநில மேற்பகுதி) உயர் அதிகாரி சசி அரோரா கூறியதாவது, காஷ்மீர் மாநிலத்தில் 3ஜி சேவையை துவக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம், தங்கள் நிறுவன 3ஜி சேவையை, புதிதாக 3 மில்லியன் காஷ்மீர் மக்கள் பயன்படுத்த உள்ளார்கள். தற்போதைய அளவில் ஸ்ரீநகரில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்களுக்கு பிறகு, காஷ்மீரில் 3ஜி சேவையை அறிமுகப்படுத்திய மூன்றாவது நிறுவனம் என்ற பெருமையை ஏர்டெல் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|