பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
00:01
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின், கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஏப்ரல் மாதத்தில், புதிய கணக்கீட்டு முறையின் அடிப்படையில், 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 13.1 சதவீதமாக இருந்தது. இது, குறித்த செய்தி வெளியானதையடுத்து, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், நுகர் பொருள்கள், ரியல் எஸ்டேட், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்திருந்தது.இந்நிலையில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை நிறுத்தம் முறையற்றது என்பதுடன், இதற்கு தடை உத்தரவையும் அரியானா மாநில அர” பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கும் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, மாருதி நிறுவன பங்கின் விலை 1.46 சதவீதம் அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 116.36 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,268.54 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,399.02 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,182.90 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 25 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 35.25 புள்ளிகள் சரிவடைந்து, 5,485.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,521.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,457.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|