பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
08:52
மும்பை : ஆப்ரிக்க நாடுகளில் 2ஜி மற்றும் 3ஜி சேவையை தங்குதடையின்றி வழங்குதல் மற்றும் சேவையை விரிவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனம் பார்தி ஏர்டெல், சீனாவின் முன்னி தொலைதொடர்பு நிறுவனமான ஹூவேயுடன் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுதொடர்பாக, பார்தி ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆப்ரிக்க நாடுகளில், ஏர்டெல் நெட்வொர்க்கை திட்டமிடல், அமைத்தல், இன்ப்ராஸ்ட்ரெக்சர் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை ஹூவேய் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக, ஹூவேய் நிறுவனத்துடன் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|