பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
09:21
மும்பை : சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத இரட்டை எரிபொருளாலாலான பவர் பிளாண்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜப்பான் நிறுவனத்துடன் உதவி கொண்டு அமைக்கிறது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜப்பான் நிறுவனமான நியூ எனர்ஜி அண்ட் இண்டஸ்டிரியல் டெக்னாலஜி டெவலப்மெண்ட் ஆர்கனைசேசன் (என்இடீஓ) துணையுடன், புனேயில் இந்த பிளாண்ட் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் யாதெனில், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஊறு ஏற்படாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே ஆகும். 2 ஆண்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட உள்ள இந்த பவர் பிளாண்டில், இயற்கை எரிவாயு மற்றும் டீசலின் உதவியுடன் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. ஜப்பானில் இந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, இந்தியாவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|