பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
12:56
விஜயவாடா : ரெனால்ட் நிறுவன புதிய வரவான புளூயன்ஸ் கார் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. லக்சுரி கார்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான பிரான்சின் ரெனால்ட் நிறுவனம், சமீபத்தில் புதிய வரவான புளூயன்ஸ் சேடான் வகை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக, விஜயவாடாவில், புதிய கார் ஷோரூமும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரெனால்ட் இந்தியா துணை நிர்வாக இயக்குனர் சுதிர் ராவ் கூறியதாவது, விஜயவாடாவில் புதிய ஷோரூம் மற்றும் புளூயன்ஸ் காரை அறிமுகப்படுத்தியதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தற்போதைய அளவில், இந்த ஷோரூமில் புளூயன்ஸ் (லக்சுரி) மற்றும் கேலியோஸ் ( காம்பாக்ட் எஸ்யூவி) உள்ளிட்ட கார்களை மட்டும் வர்த்தகம் செய்ய உள்ளதாகவும், 2012ம் ஆண்டின் இறுதிக்குள், மேலும் 5 புதிய மாடல் கார்களை வர்த்தகம் செய்ய உள்ளதாக அவர் கூறினார். ஆண்டிற்கு 50 ஆயிரம் புளூயன்ஸ் கார்களை வர்த்தகம் செய்ய தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அதேபோல், ஆண்டிற்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் பொருட்டு ரூ. 5 ஆயிரம் கோடி இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|