பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
14:25
கொச்சி : மகிந்திரா டூவீலர்ஸ் லிமிடெட் நிறுவனம், மே மாதத்தில், விற்பனையில் 147 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மகிந்திரா டூவீலர்ஸ் லிமிடெட் நிறுவனதுணை தலைவர் தேவேந்திர ஷிண்டே கூறியதாவது, தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு தேசிய அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது அனைவரும் அறிந்ததே. கேரளாவில், நாங்கள் செப்டம்பர் 2009ம் ஆண்டு அடிஎடுத்து வைத்தோம். துவங்கிய சிறி்து நாட்களிலேயே விற்பனையின் உச்சம் தொட்டுள்ளது எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும், தங்கள் நிறுவன விற்பனை 147 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது ம்ககளிடையே தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு உள்ள நன்மதிப்பு மற்றும் வரவேற்பை காட்டுகிறது. கேரள மக்களுக்கு , தங்கள் நிறுவன தயாரிப்புகள் எளிதில் கிடைக்கும் பொருட்டு, 30 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களை நிர்வகி்த்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் சிறந்த சர்வீஸ் சேவையை பெறும் நோக்கில் 8 பிரத்யேக சர்வீஸ் மையங்களையும் நிர்வகித்து வருவதாக அவர் தெரிவித்தார். தேசிய அளவில், தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை இந்த மே மாதத்தில் 36 சதவீதம் வளர்ச்சி அடைந்து 10,970 யூனிட்களாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 2 லட்சம் யூனிட்களாக இருந்த விற்பனை இந்த மே மாதத்தில் 2.5 லட்சம் யூனிட்களாக உயர்ந்துள்ளதாகவும், இதில் ரோடியோ வாகனத்தின் விற்பனை மட்டும் 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|