பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
15:32
புதுடில்லி : இந்த ஆண்டின் மே மாதத்தில், விசா -ஆன்- அரைவல் மூலம் இந்தியாவிற்கு அதிகளவிலான பிலிப்பைன்ஸ் நாட்டினர் வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தாண்டின் மே மாதத்தில் 865 பேர் சுற்றுலாப்பயணிகளாக இந்தியா வந்துள்ளனர். இவர்களில் 206 பேர் பிலிப்ப்னைசிலிருந்தும், 177 பேர் ஜப்பானிலிருந்தும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, சிங்கப்பூரிலிருந்து 149 பேரும், இந்தோனேஷியாவிலிருந்து 122 பேரும், நியூசிலாந்திலிருந்து 121 பேரும், பின்லாந்திலிருந்து 57 பேரும், 18 பேர் கம்போடியாவில் இருந்தும், வியட்நாமிலிருந்து 6 பேரும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். லக்செம்பர்க் மற்றும் மியான்மரிலிருந்து 4 பேரும், லாவோஸிலிருந்து ஒருவரும் சுற்றுலாப் பயணிகளாக இந்தியா வந்துள்ளனர். 2010ம் ஆண்டு விசா ஆன் அரைவல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, ஜப்பான், பின்லாந்து, லக்செம்பர்க், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் இந்த திட்டம், இந்த ஆண்டிலும் நீட்டிக்கப்பட்டது. கம்போடியா, இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|