பதிவு செய்த நாள்
13 ஜூன்2011
14:25
பீஜிங் : கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஹெவ்லெட் பேக்யார்டு (ஹெச்பி) நிறுவனம், சீனாவில் 78,740 லேப்டாப் பேட்டரீகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சீனாவின் முன்னணி தரநிர்ணய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 2007ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருநது 2008ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட லேப்டாப்களில் உள்ள பேட்டரீகள், அதிக சூடு காரணமாக உருகி விடுவதாகவும், இதன்காரணமாக தீபிடிக்கும் அபாயமும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரீகளை திருப்பிக் கொடுத்து, புதிய பேட்டரீகளை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் 15 ஆயிரம் பேட்டரீகள், 2010ம் ஆண்டு மே மாதத்தில் 19573 பேட்டரீகளை இதே காரணங்களுக்காக, ஹெச்பி நிறுவனம் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|