பதிவு செய்த நாள்
13 ஜூன்2011
16:41
ஐதராபாத் : பிளாக்பெர்ரி மொபைல் போனை வடிவமைத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற கனடாவைச் சேர்ந்த ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) நிறுவனம், இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் மேலும் 200 எக்ஸ்பீரியன்ஸ் ஜோன்களை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரிம் நிறுவன ( சேனல் அண்ட் சேல்ஸ் பிரிவு) உயர் அதிகாரி சஞ்சய் கவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில், பிளாக்பெர்ரி போன்களுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவில் பிளாக்பெர்ரி சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது நாடு முழுவதும் 500 அவுட்லெட் சார்ந்த எக்ஸ்பிரீயன்ஸ் ஜோன்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள், மேலும் 200 எக்ஸ்பிரீயன்ஸ் ஜோன்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். புதிதாக திறக்கப்பட உள்ள எக்ஸ்பிரீயன்ஸ் ஜோன்களில், பிளாக்பெர்ரி தயாரிப்புகள் மட்டுமல்லாமல், புதிய வரவான டேப்லெட் 'பிளேபுக்' வரையிலான சாதனங்களும், அதுகுறித்த முழுமையான விளக்கங்களும் இங்கே கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|