பதிவு செய்த நாள்
14 ஜூன்2011
14:31
மும்பை : புஷ் மெயில் சேவைக்காக, பாரத் பெர்ரி டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பதாக மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தி்த்த எம்டிஎன்எல் தலைவரும், நிர்வாக இயக்குனருமான குல்தீப் சிங் கூறியதாவது, தங்கள் வாடிக்கையாளர்கள், புஷ் மெயில் சேவையை பெறும் பொருட்டு இந்த கைகோர்ப்பு நடந்துள்ளது. மொபைல் டேட்டா கனெக்டிவிட்டியின் மூலம் டேட்டா பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த புஷ் மெயில் சேவை, வாடிக்கையாளர்களை மேலும் பரவசப்படுத்தும் என்று கருதப்படுகிறது. போஸ்ட் பெய்டு மற்றும் பிரீ பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சேவையை அனுபவிக்கலாம். இந்த சேவையைப் பெற டால்பின் வாடிக்கையாளர்கள், 'எஸ்யூபி பீபீ' என்று டைப் செய்து 51122 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தால், இந்த புஷ் மெயில் சேவையை ஒருமாதத்திற்கு இலவசமாகப் பெறலாம் என்றும், பின் இதற்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|