பதிவு செய்த நாள்
14 ஜூன்2011
15:59
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 42.63 புள்ளிகள் அதிகரித்து 18308.66 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 17.70 புள்ளிகள் அதிகரித்து 5500.50 என்ற அளவிலும் இருந்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்தபோதிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, ஐடிஎப்சி, டாடா ஸ்டீல், சிப்லா, அம்புஜா சிமெண்ட்ஸ், கெயில் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|