பதிவு செய்த நாள்
15 ஜூன்2011
13:44
மும்பை : டாய்ச் பேங்க் இந்தியாவின் சிறந்த செயல்பாடுகளால், நிகரலாபம் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் வங்கி சேவை புரிந்து வரும் டாய்ச் பேங்கின் இந்திய அங்கமான டாய்ச் பேங்க் இந்தியா, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டில் நிகரலாபம் 41 சதவீதம் அதிகரித்து ரூ. 630 கோடி ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், இது ரூ. 446 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல நிகரவட்டியின் மூலம் கிடைத்த வருமானம் 11 சதவீதம் அதிகரித்து ரூ. 1,419 கோடி என்ற அளவிலும், வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் 19 சதவீதம் அதிகரித்து ரூ. 2,861 கோடியாக பதிவாகி உள்ளதாகவும் டாய்ச் பேங்க் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|