பதிவு செய்த நாள்
15 ஜூன்2011
14:00
மும்பை : ஏற்றுமதி மற்றும் கன்சல்டன்சி சேவையை மேம்படுத்தும் வகையில் எக்ஸிம் வங்கி, தான்சானியா நாட்டிற்கு 36.65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுதொடர்பாக, தான்சானிய அரசுடன் எக்ஸிம் பேங்க் ( எக்ஸ்போர்ட் - இம்போர்ட் பேங்க் ஆப் இந்தியா) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில், ஏற்றுமதி மற்றும் கன்சல்டன்சி சேவையை மேம்படுத்த இந்த பணம் பயன்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டின் மார்ச் 28ம் தேதி தீர்மானிக்கப்பட்டு, மே மாதம் 20ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, தான்சானியாவிற்கு இந்தியா-ஆப்ரிக்கா நிதியிலிருந்து 723 வாகனங்களை வாங்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|