பதிவு செய்த நாள்
15 ஜூன்2011
23:47
மும்பை: சென்ற மே மாதம், இந்தியா,தென்னாப்பிரிக்காவில் இருந்து மேற்கொண்ட நிலக்கரி இறக்குமதி 35 சதவீதம் குறைந்துள்ளது.நம் நாடு, சென்ற மே மாதம், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12.70 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், நிலக்கரி இறக்குமதி 19.30 லட்சம் டன்னாக இருந்தது.நடப்பு காலண்டர் ஆண்டில், மே மாதம் வரையிலான 5 மாதங்களில், தென்னாப்பிரிக்காவில் இருந்து, இந்தியா 63.40 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட 24 சதவீதம் குறைவாகும்.தென்னாப்பிரிக்காவில் இருந்து சென்ற மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த நிலக்கரி ஏற்றுமதியில், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் பங்களிப்பு 45 சதவீதமாக உள்ளது என, எம் ஜங்ஷன் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|