பதிவு செய்த நாள்
15 ஜூன்2011
23:49
சென்னை: பெட்ரோல் விலை உயர்வு, வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மந்தமடைந்துள்ள கார் விற்பனையை உயர்த்த, நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.கடந்தாண்டு ஜூன் மாதம் பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை 32 சதவீதம் (15.40 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கார் விற்பனை மந்தமடைந்துள்ளது.மேலும், டீசல் கார் வாங்குவது அதிகரித்து வருகிறது.இதனையடுத்து, பெட்ரோல் கார் விற்பனையை உயர்த்த நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. அதிரடி விலைக் குறைப்பு, கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளிட்டவற்றின் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.ஹோண்டா சீயல் கார்ஸ் இந்தியா நிறுவனம், அதன் கார் விலையை 66ஆயிரம் ரூபா# வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. கார் தயாரிப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால், இந்த விலை குறைப்பு சாத்தியமாகியுள்ளதாக ஹோண்டா சீயல் கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ஜானேஷ்வர் சென் தெரிவித்தார். இந்நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு காரணமாக, பெட்ரோலில் இயங்கும் 'ஹோண்டா சிட்டி'கார் விற்பனை ‹டு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு போட்டியாக ஹுண்டாயின் 'வெர்னா', மாருதியின் 'எஸ்.எக்ஸ்4' வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 'வென்டோ' ஆகியவை உள்ளன. இவை பெட்ரோல் அல்லது டீசலில் இயங்குகின்றன. ஆனால் 'ஹோண்டா சிட்டி' பெட்ரோலில் மட்டும் இயங்கும் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனமும், அதன் கார் விற்பனையை உயர்த்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம், தமிழகத்திற்கு மட்டும் 60ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் '”மோ', 'சபாரி டிகார்','ஆர்யா','கிராண்டி' கார்களுக்கு 20ஆயிரம் வரை ரொக்கத் தள்ளுபடி மற்றும் பழைய கார்களை மாற்றிக் கொண்டால் 50ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேன்ஜ் போனஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் நாடு முழுவதும் 'நானோ' கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், 100 சதவீத கடன் வசதி, 60ஆயிரம் கிலோ மீட்டர் அல்லது 4ஆண்டுகள் உத்தரவாதம் என பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. இத்துடன் 9.25 சதவீத வட்டியில் வாகனக் கடன், 85 சதவீதம் வரையிலான கடனுக்கு 3,500 ரூபாய்க்கும் குறைவாக எளிய மாதத் தவணை என, கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக விற்பனையை அதிகரிக்க முனைந்துள்ளது. இதே போல், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் 'செவர்லெட் ஸ்பார்க்' கார் விலையை 50ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. இதன்படி, இந்த காரின் குறைந்தபட்ச விலை 3 லட்சத்து 23ஆயிரம் ரூபாயில் இருந்து 2லட்சத்து 79 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக, எல்.பி.ஜி கார் விலை 4லட்சத்து 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரம்ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.இதேபோல் மாருதி ”‹கி, போர்டு உள்ளிட்ட நிறுவனங் களும் கவர்ச்சிகரமான விலை யில் வாகனங்களை விற்கத் தொடங்கியுள்ளன. பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, வாகனக் கடனுக்கான வட்டி விகிதமும் உயர்ந்துள்ளதால் கார் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது. தற்போது வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் 12.5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வாகனக் கடனுக்கு ஏற்பாடு செய்து தருகின்றன. இதன்படி பெட்ரோலில் இயங்கும் கார்களுக்கு, சந்தையை விட 2 சதவீதம் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது. வோக்ஸ்வேகன், ஹோண்டா சீயல் இந்தியா நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்கள் மூலம், குறுகிய கால சலுகையாக 6.99 சதவீத வட்டியில் வாகனக் கடன் வழங்கத்தொடங்கியுள்ளன. இதனால் வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர். வாகனக் கடனுக்கான வட்டிச் சலுகையை, கார் தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|