பதிவு செய்த நாள்
15 ஜூன்2011
23:50
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. ஆனால், நாட்டின் பணவீக்கம், சென்ற மே மாதத்தில், 9.06 சதவீதமாக, அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வியாழக்கிழமை ( இன்று) அறிவிக்கவுள்ள அதன் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரிக்கும் என்ற அச்சப்பாடு சந்தையில் நிலவியது. இதனால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது.புதன்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகன துறையில், குறிப்பிட்ட சில நிறுவன பங்குகளுக்கு, தேவைப்பாடு காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 176.42 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,132.24 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,308.69 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,111.21 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 25 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 53 புள்ளிகள் சரிவடைந்து, 5,447.50 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,499.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,438.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|