பதிவு செய்த நாள்
18 ஜூன்2011
00:02
புதுடில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், மானேசர் தொழிற்சாலை, கடந்த 13 நாள்களாக தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் செயல்படாமல் இருந்தது. நிர்வாகத்திற்கும், பணியாளர்கள் சங்கங்களுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, இத்தொழிற்சாலையில் நாளை முதல் கார்கள் உற்பத்தி தொடங்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய ஒப்பந்தத்தின்படி, பணிநீக்கம் செய்யப்பட்ட 11 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், புதிய தொழிற்சங்கம் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பது குறித்து, நிறுவனம் எந்த முடிவும் எடுக்கவில்லை.கடந்த 13 நாள்களாக நடைபெற்ற வேலை நிறுத்தத்தால், 600 கோடி ரூபாய்க்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் இதன் பங்கின் விலை, 1.85 சதவீதம் சரிவடைந்து, 1,167.40 ரூபாய்க்கு கைமாறியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|