பதிவு செய்த நாள்
18 ஜூன்2011
00:05
மும்பை: நிலக்கடலையை விட, அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் பருத்திசாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நடப்பு 2011-12ம் கரீப் பருவத்தில், நிலக்கடலைசாகுபடி பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் கோடை மற்றும் குளிர் பருவங்களில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. மொத்த நிலக்கடலை உற்பத்தியில்,கோடை பருவத்தின் பங்களிப்பு 70சதவீதமாக உள்ளது. சென்ற 2010-11ம் கோடை பருவத்தில், நாட்டில் 49.8 லட்சம் எக்டேரில் நிலக்கடலைசாகுபடி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டில் இது 44.7 லட்சம் எக்டேராக இருந்தது.நாட்டில், நிலக்கடலை உற்பத்தியில் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அதிக வருவாய் காரணமாக பருத்தியை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு நடப்பு 2011-12 பயிர் பருவத்தில், நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 17.4சதவீதம் உயர்த்தி, குவிண்டாலுக்கு 2,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும், இதை விடசந்தையில் நிலக்கடலைக்கு கூடுதல் விலை கிடைக்கிறது என்றாலும், கடலையில் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நிலக்கடலை 2,800 ரூபாய்க்கு விற்பனையானது. இது, தற்போது 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், ஒரு கேண்டி (356 கிலோ) பருத்தி விலை, 43ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விலை போகிறது. இது, கடந்த ஆண்டை விட 55சதவீதம் அதிகமாகும்சென்ற மார்ச் மாதத்தில், ஒரு கேண்டி பருத்தி, 61ஆயிரத்து 700 ரூபாய் என்ற அளவில் விலை போனது குறிப்பிடத்தக்கது.இதனால் நிலக்கடலையை பயிரிட்டு வந்த விவசாயிகள், பருத்திசாகுபடியில் ஆர்வத்துடன் இறங்கியுள்ளனர். குஜராத்தில் சென்ற 13ம் @ததி நிலவரப்படி, 71ஆயிரத்து 300 எக்டேரில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு லட்சத்து ஆயிரத்து 200 எக்@டராக இருந்தது.இதே காலத்தில் இங்கு பருத்திசாகுபடி பரப்பளவு, ஒரு லட்சத்து 45ஆயிரத்து 700 எக்டேரில் இருந்து, 2 லட்Œத்து 23ஆயிரத்து 500 எக்டேராக அதிகரித்துள்ளது.அது போன்று, ஆந்திராவில் சென்ற 8ம் தேதி நிலவரப்படி, நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 16ஆயிரம் எக்டேரில் இருந்து, 8,000 எக்டேராக குறைந்துள்ளது. அதேசமயம், பருத்திசாகுபடி பரப்பளவு இரு மடங்காக உயர்ந்து 18ஆயிரம் எக்டேரில் இருந்து, 38ஆயிரத்து 100 எக்டேராக அதிகரித்துள்ளது.இது குறித்து, கருத்து தெரிவித்த எண்ணெய் உற்பத்தியாளர்கள்சங்கத்தின் செயல் இயக்குனர் பி.வி.மேத்தா, 'தற்போது நிலக்கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் முடிவடைந்த பிறகே, பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளதா, இல்லையா என்பது தெரியவரும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|