பருவநிலை மாற்றத்தால்  ஆப்பிள் விளைச்சல் பாதிப்புபருவநிலை மாற்றத்தால் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு ... கரடியின் பிடியில் பங்குச்சந்தை 'சென்செக்ஸ்' மேலும் 115 புள்ளிகள் சரிவு கரடியின் பிடியில் பங்குச்சந்தை 'சென்செக்ஸ்' மேலும் 115 புள்ளிகள் சரிவு ...
வங்கிகளின் வட்டி விகிதம் உயருகிறது வீட்டு கடனுக்கான மாத தவணை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2011
00:06

சென்னை: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால்,வீட்டு வசதிக் கடன் பெற்றவர்களின் வட்டிச் சுமை உயரும் என்பதோடு, மாதத் தவணைக் காலமும் அதிகரிக்கும். சென்ற மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பணவீக்கம், 9.06சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பணப்புழக்கத்தை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.25சதவீதம் உயர்த்தி, 7.5சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டிவிகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.50சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 10 முறை உயர்த்தியுள்ளது. சென்ற மே மாதம் 3ம் தேதி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 0.50சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, 45 வங்கிகள், அவற்றின் பலதரப்பட்ட கடன்களுக்கான வட்டியை 0.25சதவீதம் முதல் ஒருசதவீதம் வரை உயர்த்தின. இதனால் இவ்வங்கிகளிடம் இருந்து வீட்டு வசதி, வாகனம், தனி நபர் கடன்களைப் பெற்றவர்களின் வட்டிச் ”மை அதிகரித்தது.இந்நிலையில், ஒன்றரை மாதத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால், வங்கிகளும் அவற்றின் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஜூலை மாதம், இந்த வட்டி உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இந்த வட்டி உயர்வால், வீட்டு வசதி கடன் பெற்றவர்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதம் 2சதவீதம் அதிகரித்து, 8சதவீதத்தில் இருந்து 10சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டிச் செலவு கூடியதால், கடனை திரும்ப செலுத்தும் மாதாந்திர தவணைக் காலம் அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து கடனாளிகள் மீள்வதற்குள், பேரிடியாக, மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோன்று, புதிதாக வீட்டு வசதிக் கடன் பெறுவோர், வட்டி விகித உயர்வால், மாதத் தவணையாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.இதே போல் வாகனக் கடன் பெறுவோரின் வட்டிச் ”மையும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வாகனக் கடன் வாங்கியவர்கள், நிலையான வட்டி விகிதத்தை தேர்வு செய்திருந்தால், அவர்களின் மாதாந்திர தவணைத் தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது. ஆனால்,மாறுபடும் வட்டி விகிதத்தை தேர்வு செய்தவர்களின் மாத தவணைத் தொகையோ அல்லது தவணைக் காலமோ அதிகரிக்கும்.வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தும் போது, டிபாசிட்டுகளுக்கான வட்டியையும் உயர்த்தும். இது, வங்கிகளில் குறித்த கால வைப்பு நிதியில் முதலீடு செய்வோருக்கு கூடுதல் வருவாயை வழங்கும். குறிப்பாக, ஓராண்டிற்கும் குறைவான முதலீட்டு திட்டங்களில் அதிக வருவாய் கிடைக்கும்.அதுபோல், இந்த வட்டி உயர்வால், மிகக் குறுகிய கால கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீதான வருவாயும் அதிகரிக்கும். வட்டி உயரும் போது, குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் இருந்து வேறு திட்டங்களுக்கு மாறிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.பேங்க் ஆப் பரோடா, எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ் ஆகியவை மிகக் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன. இவை, மாறுபடும் வட்டி திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 8.5சதவீத வட்டியில், மாதம் 2,052 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகின்றன. இந்தியன் பேங்க், ஒரு லட்ச ரூபாய்க்கு 9சதவீத வட்டியில், மாதம் 2,075 ரூபாய் வீதம் 5ஆண்டுகளில் திரும்ப செலுத்தக் கூடிய, வீட்டு வசதிக் கடன் வழங்குகிறது. இதே காலத்திற்கு, பாரத ஸ்டேட் வங்கி, 30 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கு 9.25சதவீதமும், 75 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட கடனுக்கு 9.75சதவீதமும் வட்டி வ‹லிக்கிறது. எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், நிலையான வட்டி திட்டத்தின் கீழ் வழங்கும் வீட்டு வசதிக் கடனுக்கு, குறைந்தபட்சமாக 8.90சதவீத வட்டியை நிர்ணயித்துள்ளது.10 ஆண்டுகளுக்கான இந்த வட்டி விகித திட்டம், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்ட மாறுதலுக்கான வசதியைக் கொண்டது. பேங்க் ஆப் பரோடா, இதே திட்டத்தின் கீழ், ஒரு லட்ச ரூபாய்க்கு 9.50சதவீத வட்டியில், மாதம் 2,101 ரூபாய் வீதம் 5 ஆண்டிற்கான வீட்டு வசதிக் கடன்களை வழங்குகிறது.எச்.டீ.எப்.சி நிறுவனம், 1 லட்ச ரூபாய் வீட்டு வசதிக் கடனுக்கு, மாறுபடும் வட்டி விகித திட்டத்தின் கீழ் 9.25சதவீதமும்(20 லட்ச ரூபாய் வரை), நிலையான வட்டி திட்டத்தில் 11.50சதவீதமாகவும் வட்டியை நிர்ணயித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் மேலும் உயரும் நிலையில், ரிசர்வ் வங்கி, மீண்டும் வங்கிகளுக்கான வட்டியை உயர்த்தினால், வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குவோரை வீதிக்கு கொண்டு வந்து விடும் என வங்கி வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)