பதிவு செய்த நாள்
18 ஜூன்2011
00:07
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும், மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியும், கிரீஸ் நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற தகவலாலும், உலகளவில், பங்கு வர்த்தகம் மிகவும் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, அதிகளவில் சாப்ட்வேர் ஏற்றுமதி மேற்கொள்ளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது.மேலும், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 115.35 புள்ளிகள் சரிவடைந்து, 17,870.53 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,064.76 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,844.09 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும்,12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 30.35 புள்ளிகள் குறைந்து, 5,366.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,421.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,355.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|