பதிவு செய்த நாள்
20 ஜூன்2011
16:02
மும்பை : வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று, 72 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் 300 புள்ளிகளுக்கும் சரிவுடன் முடிவடைந்தது பங்குமுதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (செனசெக்ஸ்) 363.90 புள்ளிகள் குறைந்து 17506.63 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 108.50 புள்ளிகள் குறைந்து 5257.90 என்ற அளவிலும் இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குமதிப்புகளும் இறங்குமுகத்திலேயே இருந்தது. ஜிடிஎல் கிராஸ்டு, ஜிடிஎல் பிளமேடட், கேஎஸ் ஆயில்ஸ், டெல்டா கார்ப், அலோக் இண்டஸ்டிரீஸ், ஹெச்டிஐஎல், லான்கோ இன்ப்ராடெக், ஐவிஆர்சிஎல், புஞ்ஜ் லாய்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, டிசிஎஸ், என்டிபிசி, ஐடிசி, இன்போசிஸ், ஹெச்டிஎப்சி பேங்க், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், கெய்ர்ன் இந்தியா, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறுங்குமுகத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|