பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
01:00
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, 9.3 சதவீதமும், உரங்கள் உற்பத்தி 1.3 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன. 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் உற்பத்தி முறையே 54.1 சதவீதம் மற்றும் 7.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.6 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 8.5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் தயாரிப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி முறையே 2.8 சதவீதம் மற்றும் 11 சதவீதமாக உள்ளது.சென்ற ஏப்ரல் மாதத்தில், பெட்ரோலிய சுத்திகரிப்பு துறையின் வளர்ச்சி,6.6 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு ஏப்ரலில்,5.3 சதவீதமாக குறைந்திருந்தது. இதே மாதங்களில், உருக்கு துறை நிறுவனங்களின் வளர்ச்சி,12.9 சதவீதத்திலிருந்து, 4.8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும்,மின்சார தயாரிப்பு துறை நிறுவனங்களின் வளர்ச்சி,6.9 சதவீதத்திலிருந்து, 6.8 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 6.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|